சென்னை: அரசியலில் எதுவும் நடக்கலாம். என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், எப்படி வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளளாம். எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் கொள்கைளை வளைத்துக் கொள்ளலாம்.

இருமுறை அதிமுகவுடன் அணி சேர்ந்து பின்னர் வெளியேறி திமுகவுடன் சேர்ந்து அரசியல் செய்து வந்த பாமக இப்போது மீண்டும் ஒரு முறை அதிமுகவுடன் சேர்ந்துள்ளது.

இந்த நேரத்தில் சில பழைய நினைவுகள் மனதில் வந்து போவதை தடுக்க முடியவில்லை.

2001ம் ஆண்டு அதிமுக கூட்டணியிலிருந்து படு வேகமாக வெளியேறியது பாமக. அப்போது டாக்டர் ராமதாஸ் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை இது...

டாக்டர் ராமதாஸ் ஒரு சந்தர்ப்பவாதி. தனது சொந்த நலன்ளுக்காக அவர் கூட்டணிகளை உருவாக்குவார், கூட்டணியிலிருந்து விலகுவார், கூட்டணிகளை உடைப்பார்

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதற்காக பொருத்தமில்லாத காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார் ராமதாஸ்

நான் அவர்களுக்கு ராஜ்யசபா சீட் தருவேன் என்று ஒருபோதும் கூறியதில்லை. தேர்தலுக்கு முன்பாக ராஜ்யசபா சீட் தர வேண்டும் என ராமதாஸ் கேட்கவும் இல்லை. நானும் உறுதி அளிக்கவும் இல்லை.

சட்டசபைத் தேர்தலுக்கு மட்டும்தான் நாங்கள் கூட்டணி அமைத்தோம். ராஜ்யசபா தேர்தல் குறித்து நாங்கள் பேசவே இல்லை

அதிமுகவுக்கு 100 சதவீத வெற்றி வாய்ப்பிருந்த தொகுதிகளைத்தான் பாமகவுக்கு நாங்கள் விட்டுக் கொடுத்தோம். அவர்களுக்கு வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளை நாங்கள் தரவில்லை.

ராமதாஸ் விருப்படியேதான் சீட் ஒதுக்கப்ட்டது. கடந்த சட்டசபையில் பாமகவுக்கு நான்கு இடங்கள் மட்டுமே. இந்த தேர்தலில் 20 சீட்கள் கிடைத்துள்ளது. இதை ராமதாஸ் உணர வேண்டும்.

1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாமகவை வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாக பாமகவை அனுப்பி வைத்தது நான்தான் என்பதை ராமதாஸ் மறக்கக் கூடாது.

கூட்டணிக் கட்சித் தலைவர்களை நான் ஒரு போதும் அவமரியாதை செய்ததில்லை. மணிக்கணக்கில் அவர்களை காத்திருக்க வைத்து அவமரியாதை செய்யும் பழக்கமும் எனக்கு இல்லை.

ராமதாஸ் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு பொருத்தமான காரணங்களை ஒருபோதும் கூறுவதில்லை

1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போதும் அவர் சில மாதங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகிச் சென்றார். அதற்கும் அவர் பொருத்தமான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. இப்போதும் விலகியுள்ளார். இதற்கும் பொருத்தமான காரணம் எதையும் அவர் சொல்லவில்லை.


1998ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் என்னை மட்டும் அழைத்திருந்தார் வாஜ்பாய். நான்தான் அவரிடத்தில் சொல்லி, டாக்டர் ராமதாஸ் உள்பட அனைத்துக் கூட்டணித் தலைவர்களையும் அழையுங்கள் என்று எடுத்துக் கூறினேன் என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.

சென்னை: 1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது.
2001 ...
2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக.
ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக.
காரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ்.
அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து திமுக கூட்டணிக்கு வந்தார்.
2004...
2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார்.
2006...
2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.2008 ...2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.
2009...
2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.தேர்தலுக்கு பின் மீண்டும் வரும்-காங் நம்பிக்கை:கூட்டணியை விட்டு பாமக போய்விட்டாலும் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால் மீண்டும் பாமக தங்களிடம் வந்துவிடும் என்று காங்கிரஸ் நிச்சயமாக நம்புகிறது.இதனால் தான் இன்று பாமக கூட்டணியைவிட்டு வெளியேறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பாமகவை கூட்டணியில் நீடிக்க வைக்க எவ்வளவோ முயன்றோம். இப்போதும் கூட அவர்களுடன் கூட்டணியையே விரும்புகிறோம். அந்தக் கட்சியுடன் நல்லுறவு நீடிக்கும் என்றார்.
2010...... ????????????????