கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரபாகரனின் வலது கரமும், உளவுப் பிரிவு தலைவருமான பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை என்று நம்பப்படுகிறது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதி முக்கிய தலைவர்களில் ஒருவர்தான் பொட்டு அம்மான். உளவுப் பிரிவு தலைவராக இருந்து வந்தார்.பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் பொட்டுதான் இருந்தார்.

பிரபாகரனின் இருப்பிடங்கள், செயல்பாடுகள் குறித்து அவரது மனைவிக்கு அடுத்தபடியாக பொட்டு அம்மனுக்குத்தான் தெரியும். அந்த அளவுக்கு மிக மிக முக்கிய இடத்தில் இருந்தார் பொட்டு அம்மான்.மிகத் திறமையானவராக கருதப்படும் பொட்டு அம்மான் ராணுவத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக முன்பு ராணுவம் கூறியது. ஆனால் பின்னர் ராணுவ தளபதி பொன்சேகா கூறுகையில், பொட்டு அம்மானின் உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றார்.

இதனால் பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை என்று கருதப்படுகிறது. அதேசமயம், அவர் உயிருடன் இருந்தால் எங்கு இருப்பார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.

அவர் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருக்கலாம் என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் ராணுவத்தின் பிடியில் சிக்கக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை என்பதால் அதுவும் நம்பும்படியாக இல்லை.

பொட்டு அம்மன் உயிரிழக்கவில்லை என்பது மட்டும் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் உயிருடன்தான் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் எங்கு இருக்கிறார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.பொட்டு அம்மான் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் சமீபத்தில் முடிந்த கடைசிக்கட்ட போரின்போது அவர் தப்பியிருக்க முடியாது.

அதற்கு முன்பே அவர் தப்பிப் போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய நடவடிக்கைகள் அனைத்திலும் பொட்டு அம்மானின் பங்கு உண்டு. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் , பிரேமதாசா கொலைச் சம்பவம், 1996ல் கொழும்பு வங்கி மீது நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 90 பேர் பலியான சம்பவம், அதையடுத்து கொழும்பு அருகே நடந்த பயணிகள் ரயில் மீதான தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல முக்கிய தாக்குதல்களில் பொட்டு அம்மானின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டத்தை பிரபாகரனும், பொட்டு அம்மானும் சேர்ந்துதான் தீட்டியதாக கருணா சமீபத்தில் கூறினார் என்பது நினைவிருக்கலாம்
அம்பாறை: இலங்கையின் கிழக்கில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் மறைந்துள்ள விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

வடக்கில் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் அங்கு விடுதலைப் புலிகளின் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது ராணுவம்.

இருப்பினும் கிழக்கில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் விடுதலைப் புலிகள் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.இந்த நிலையில் ராணுவத்தினர் மீது நடந்த இரு வேறு தாக்குதல்களில் 3 ராணுவ வீரர்கள்

கொல்லப்பட்டனர்.இதுகுறித்து அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு கூறுகையில், கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கையில் இலங்கைப் படை ஈடுபட்டுள்ளது. சனிக்கிழமை புலிகள் நடத்திய பொறி வெடித் தாக்குதலில் சிக்கி ஒரு வீரர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார்.இன்னொரு தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு: பிரபாகரனின் உடலை தகனம் செய்து விட்டதாக நேற்று கூறிய இலங்கை ராணுவம், இன்று அவரது அஸ்தியை இந்தியப் பெருங்கடலில் கரைத்து விட்டதாக
கூறியுள்ளது.இதைக் கூறியிருப்பவர் ராணுவ தளபதி சரத் பொன்சேகா.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார், உயிருடன் இருக்கிறார் என விடுதலைப் புலிகள் இருமுறை அறிவித்துள்ளது.
ஆனால் அவரது உடலைக் கைப்பற்றி விட்டதாக முதலில் கூறிய இலங்கை அரசு பின்னர் அதை புதைக்கப் போவதாக கூறியது. அதன் பின்னர் எரித்து விட்டோம் என தெரிவித்தது. இந்த நிலையில் அஸ்தியையும் கரைத்து விட்டோம் என ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ரிவிரா என்ற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார் பொன்சேகா. இந்த இதழ் நாளை வெளியாகிறது.
தனது பேட்டியில், பொன்சேகா கூறுகையில், பிரபாகரனின் உடலை செவ்வாய்க்கிழமை அடையாளம் கண்டோம். பின்னர் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட அதே இடத்தில் அவரது உடலை தகனம் செய்து விட்டோம். அஸ்தியையும் இந்தியப் பெருங்கடலில் வீசி விட்டோம்.
பிரபாகரனைக் கொல்வதற்கு முன்பே, நாங்கள் போரில் வென்று விட்டோம் என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனால் பிரபாரகனின் மரணம் உறுதி செய்யப்பட்டவுடன்தான் நான் முழு மகிழ்ச்சியை அடைந்தேன்.
பிரபாகரனுடன் சேர்த்து அன்றைய தினம் நடந்த சண்டையின்போது மொத்தம் 170 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.'
பொட்டு அம்மன் உயிருடன் இருக்கிறார்':
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபாகரனுடன் சேர்த்து பொட்டு அம்மனும் கொல்லப்பட்டு விட்டதாக முன்பு இலங்கை ராணுவம் கூறியிருந்தது. இருப்பினும் இலங்கையைச் சேர்ந்த ரிவிரா என்ற பத்திரிகைக்கு லேட்டஸ்டாக பேட்டி அளித்துள்ள ராணுவ தளபதி சரத் பொன்சேகா பொட்டு அம்மனை அடையாளம் காண முடியவில்லை என்று கூறியிருந்தார்.
மேலும், புலிகள் தலைவர்களை அடையாளம் காண அழைத்துச் செல்லப்பட்ட கருணாவும் கூட யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும், மொக்கு சிங்களவர்கள் கோட்டை விட்டு விட்டார்கள் என்று தனது சகாக்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் பொட்டு அம்மன் உயிரிழக்கவில்லை என்றும் அவர், கிழக்கில் உள்ள அடர்ந்த வனப் பகுதிக்குள் தப்பிப் போய் விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கிருந்தபடி ராணுவத் தாக்குதலால் ஆங்காங்கு பிரிந்து போய் விட்ட புலிகள் இயக்கப் போராளிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்பதை இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தினாலும் அதன் இராணுவத்தினாலும் உருவாக்கப்பட்டு பரப்பப்படும் வதத்திகளை நம்ப வேண்டாம் எனவும் உலகத் தமிழ்ச் சமூகத்தைக் அறிவழகன் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைக்கு ஆதரவுக் குரல் எழுப்பி வரும் உலகத் தமிழ்ச் சமுதாயத்தை குழப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர்.

சிறிலங்காவில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மூலமாக தனது அடையாளத்தை உறுதிப்படுத்திய அறிவழகன், பாதுகாப்புக் காரணங்களுக்கான தனது இருப்பிடத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் 'தமிழ்நெட்' செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்

களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித் துள்ளார்.

இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 30க்கும் அதிகமான
கரும்புலிவீரர்கள்

5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகளின்

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.

இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள் புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல்

சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள்

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.
அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.

ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்” என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.
தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல்.

அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

கமலின் “தசாவதாரம்” திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது
தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் கூறியதாக செய்திகள் வருகின்றன.
அவர்கள் ஒரு வாகனத்தில் தப்பியபோது ராணுவம் தடுத்து நிறுத்தியதாகவும் அப்போது பிரபாகரன் குடும்பத்தின் பாதுகாவலர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் வாகனத்தில் இருந்த அனைவருமே கொல்லப்பட்டனர்.பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நந்திக்கடல் பகுதியிலேயே இந்தச் சண்டை நடந்ததாகவும் அவர்களும் அங்கேயே கொல்லப்பட்டாகவும் என்று ராணுவம் கூறியதாக இந்திய தனியார் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
ஆனால், அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தச் செய்தியை வேறு சர்வதேச செய்தி நிறுவனங்கள் இரவு வரை உறுதிப்படுத்தவில்லை.முன்னதாக பிரபாகரன் குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று பெரிதும் நம்பப்பட்டது.பிரபாகரனின் மகள் துவாரகா நீண்ட காலத்திற்கு முன்பே லண்டனுக்குப் போய் விட்டதாகக் கூறப்பட்டது. அதேசமயம், மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி, மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பிரபாகரனுடனேயே இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.
அதே நேரத்தில் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை- பார்வதி ஆகியோர் என்ன ஆயினர் என்று தெரியவில்லை. அவர்களும் பிரபாகரனுடன் தான் வசித்து வந்தனர்.பிரபாகரன் அவர்களை போர்க் களத்திலிருந்து வேறு பகுதிக்கு போகுமாறு கூறியும் வயதான அந்தப் பெரியவர்கள் கேட்கவில்லையாம். என்ன நடந்தாலும் சரி உன்னுடனேயே இருப்போம் என்று தனது மகனிடம் கூறிவிட்டு அங்கேயே இருந்துள்ளனர்.
இதற்கிடையே, மேலும் 7 புலிகள் இயக்கத் தலைவர்களின் உடல்களை அடையாளம் கண்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.கடற்படைப் பிரிவு தலைவர் சூசை, கடற்புலிகள் பிரிவு முக்கிய தலைவர் ரங்கன், உளவுத்துறை மூத்த தலைவர் வெற்றி, உளவுப் பிரிவு முக்கிய தலைவர் ராம் குமார், பெண் உளவுப் பிரிவு முக்கிய தலைவர் மணிமேகலை என்கிற கோமளி, மட்டக்களப்பு அரசியல் பிரிவு தலைவர் அண்ணாதுரை, மூத்த உளவுப் பிரிவு தலைவர் வினோதன் ஆகியோரே அவர்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது

விடுதலைப் போரின் முக்கிய தளபதிகள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டாதாகக் செய்திகள் கிடைக்கப்பெறும் பொழுதுகளில் எங்களை நாங்களே தேற்றிக் கொள்ள முடியாதபடியான ஒரு துக்கம் எங்களைத் தாக்குவது தவிர்க்கப்பட முடியாதது. இருந்த போதும் நாங்கள் அந்தச் செய்தியின் பின்னான பொழுதுகளில் எவ்வாறு எங்களை தேற்றப் போகின்றோம். எவ்வாறு எமக்காக உயிர் நீத்தவர்களின் உணர்வுகளை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் என்பதை மிகுந்த திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏனெனில் மேற்குலக நாடுகளின் எங்களின் இழப்புக்களின் துயரப்பகிர்வுகள் எங்களின் நம்பிக்கை மீதான ஒரு உறுதிமொழிப்பாடாகவும் எம்மவரின் எதிர்காலத்திற்கான செயற்திட்ட வடிவங்களாகவும் இருக்க வேண்டுமே தவிர எமது எதிர்காலச் செயற்பாடுகளில் நாங்களே தடை போடுபவர்களாக மாறிவிடக்கூடாது.

ஆலயங்கள், தேவாலயங்களின் பால் நாங்கள் ஆத்ம சாந்தித் தேடுதலில் ஈடுபடுதலும், அமைதிப் பிரார்த்தனைகள், மெழுவர்த்தியுடனான மௌனப் பிரார்த்தனைகள் போன்றவற்றை எங்களின் இனத்தவர்களுடன் இணைந்து நாங்கள் எடுத்துச்சென்று தற்காலிகமாக எங்கள் துயரைத் தேற்றி இந்த பாழ்பட்ட உலகின் முன் எங்கள் இனத்தின் அவலத்தை வெளிக்கொணர்வோம்.

யதார்த்ததைப் புரியாத உலகாக தற்போதைய உலகு உள்ளவரையில் நாங்கள் எங்களின் பாதைகளை இலாவகமாகத் தேர்வு செய்து அவற்றில் அவதானிப்பாகப் பயணிக்க வேண்டும் என்பதையே யூதப் படுகொலைகளின் பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளின் யூதர்கள் கடைப்பிடித்தவையும், வியட்நாமியப் போரின் போது புலம்பெயர்ந்த அந்த நாட்டு மக்கள் கடைப்பிடித்தவையும் உணர்த்தி நிற்கின்றன.

இப்போது தமிழீழத் தமிழர்கள் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் யூதர்கள் இருந்த நிலையை எய்தி இருக்கிறோம். எங்களின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் முன் உதாரணங்களை புறம் தள்ளாமல் எங்களால் இந்த உலகின் பார்வையை, புரிதலை ஏற்படுத்தி எங்கள் மக்களின் கனவுகளை நிஜப்படுத்த முடியும் என்ற உருக்குறுதியுடன் நகர்வோம்.
2001 ஆம் ஆண்டு செப்ரெம்பரின் பின்னான உலகு ஒரு பாரிய மாறுதலுக்குள் தன்னை உட்படுத்தி விடுதலைக்கான போராட்டங்களைக் வேறு வகைப்படுத்தி பார்க்க முடியாதபடியான ஒரு அலசலற்ற கொள்கை வலைப்பின்னலுக்குள் கண்மூடித்தனமாக வீழ்ந்துள்ளது.

இந்த மேற்குலகு இன்று முட்டிமோதும் ஈராக்கிய, ஆப்கானிய களங்களின் இழப்புக்களும் செலவுகளும் அவற்றின் மௌனத்திற்கு இன்னும் வலுச்சேர்த்து அவற்றை மேலும் மௌனிக்க வைத்துள்ளன என்பது துன்பகரமான உண்மை.
எனவே எங்களின் குரல்கள் ஈனக்குரல்களாக நசுக்கப்பட்டு ஈழத் தமிழன் உலகின் பார்வையில் இருந்து அகற்றப்படாத வகையில் நாங்கள் சிறந்த செயற்பாட்டாளர்களாக மாற வேண்டும். உலகப்பந்தின் உச்சத்தில் ஜனனித்த ஒரு புதிய தேசமே அழிக்கப்பட்டு தொடர்புகள் அறுக்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் ஆத்திரப்பட்டு இன்னமும் ஏதிலிகளாகிவிடக்கூடாது. எங்கள் உறவுகளின் கனவுகளைப் புதைத்தவர்களாகிவிடக் கூடாது.

மாறாக, அவர்களின் கனவுகளைச் நிஜமாக்குவோம் என்ற உறுதியைச் சுமந்தபடி ஒரு ஆணித்தரமான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் வரை எமது துயரையே எமக்கான உறுதியாக்கி, புலம்பெயர்ந்த எமது உறவுகள் ஒவ்வொருவரும் மற்றையவருக்கான துணையாகி துயராற்றி உறுதிகொண்ட நெஞ்சினராக எமக்கான குரல்களாவோம்.

எமது கிராமங்களையும் நகரங்களையும் நாங்கள் புதிப்பபது என்பது கனவல்ல. மேற்குலகில் உள்ள அந்த அந்த ஊரைச் சார்ந்தவர்கள், கிராம சங்கங்கள் இவற்றைச் சாத்தியமாக்கும். ஆனால் உலகத்தை இராஜதந்திர ரீதியில் வெல்ல வேண்டிய தேவை இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டு எமது மக்களின் வேதனைகளை துடைத்தெறிய வழி செய்வோம்.

முள்வேலிகளுக்குள் அடக்கப்பட்ட எமது மக்கள் மீண்டும் மீட்கப்படுவார்கள். அதற்காக நாங்கள் இந்த உலகைத் தயார்ப்படுத்துவோம் என்பதைச் சத்திய வாக்காக்கி உறுதி எடுப்போம். புதைக்கப்பட்ட உயிர்களின் கல்லறைகள் நாட்டில் எழும்! சிதைக்கப்பட்ட நகரங்கள் மீண்டும் புதுப்பொலிவு பெறும்! எமக்கான ஒரு நாடு எமது மக்களாலேயே நிர்வகிக்கப்பட நாங்கள் ஆதாரமாய், ஜீவநாதமாய் இருப்போம் என்று சத்தியம் செய்வோம்.

முள்ளிவாய்க்கால் மீண்டும் முளைக்கும்! என் தேசம் மீண்டு எழ நான் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை நாளும் நாங்கள் காலைப் பிரார்த்தனையாக தற்போது எடுத்து எமது மக்களின் தீர்வுக்கான வடிவைத் தேடிய பயணத்தைத் தொடர்வோம்.
இலங்கை இராணுவத்தின் சூழ்ச்சியால் ஆயுதம் தரிக்காத புலிகளின் அரசியல் துறையச் சேர்ந்த புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் நேற்றுக் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் எஸ்.பத்மநாதன் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை இன்று (19.05.2009) உறுதிசெய்துள்ள அவர் மேலதிக விபரங்களை கூற மறுத்துவிட்டார்

விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் உடல்களை, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசுப் படைகளுக்கு ஆதரவாக மாறி, புலிகள் வலுவிழக்க முக்கிய காரணமாக இருந்த கருணாதான் அடையாளம் காட்டியுள்ளார்.
இதன் மூலம் புலிகளின் இறந்த உடல்களையும் காட்டிக் கொடுத்தவர் என்ற ‘பெருமை’ அவருக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.
விடுதலைப் புலிகள் குறித்து இலங்கை ராணுவத்திடம் முழுமையான தகவல்கள் இல்லை. முன்னாள் புலிகள் இயக்கத்தினரை வைத்துத்தான் பிடிபட்டவர்களையும், கொல்லப்பட்டவர்களையும் அவர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளைக் கொன்றதாக ராணுவம் அறிவித்தது. இந்த சண்டையின்போது பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக அது கூறியது. இவர்களில் பிரபாகரன் இறந்தது குறித்து குழப்பச் செய்திகளை வெளியிட்டது இலங்கை ராணுவம் .
இந் நிலையில் நேற்று கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் உடல்களை அடையாளம் காணும் பணியில் கருணாவை ஈடுபடுத்தியுள்ளது இலங்கை ராணுவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கருணா ஒவ்வொரு உடலையும் அடையாளம் காட்டி, அது யார், என்ன என்ற விவரத்தை ராணுவத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் விடுதலைப் புலிகள் இறந்த பின்னரும் அவர்களைக் காட்டிக் கொடுத்த ‘பெருமை’யைப் பெற்றுள்ளார் கருணா.

இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் 1987 - 90 காலப்பகுதிகளில் தமிழீழ தேசத்தை முற்றாக ஆக்கிரமித்து நின்ற வேளை 1988/89 இல் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அச் செய்தியை அன்று விடுதலைப்புலிகள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. இறுதியில் 1990 ம் ஆண்டு கடைசிப் பகுதியில் தேசிய தலைவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி 3 ஆண்டு கால மர்மத்தை முடித்து வைத்தார்.


அன்று அந்த மர்மமே அவரை எதிரிகளிமிருந்து காத்தது. தேசிய தலைவரின் இருப்பிடத்தை அறிய சுற்றித் திரிந்த இந்திய ஜவான்கள் இறுதியில் விடுதலைப்புலிகள் மதிநுட்ப நகர்வால் அன்று தோற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


அதேபோல், அன்று இந்திய அரசு தமிழ் மக்களைக் குழப்பி.. அவர்களை தன்னிடம் பணிய வைக்கச் செய்த பரப்புரைக்கு ஒத்த பரப்புரை ஒன்றை சிறீலங்கா சிங்கள அரசு இன்று முடுக்கிவிட்டுள்ளது.


அதற்கு அமைய பிளாஸ்ரி சேர்ஜரி (plastic surgery) மூலம் தத்துரூபமாக முகமளவில் பிரபாகரனை ஒத்து உருவாக்கப்பட்ட ஒரு உடலை பிரபாகரனின் உடல் என்று வீடியோ எடுத்துக் காட்டி உலகெங்கும் வாழும் மக்களை ஏமாற்றி வருகிறது. இது ஒருவகையில் தமிழ் மக்களை பாதிக்கும் விடயமாக இருப்பினும் இன்னொரு புறத்தில் இறந்தவராக சொல்லப்படுபவர் அப்படியே இறந்ததாக இருப்பது அவரின் பாதுகாப்பிற்கு உதவலாம். இந்தியப் படையினர் காலத்தில் இறந்தவர் இறந்தவராக இருந்த படியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும்.


தலைவர் பற்றிய காணொளிகள் சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப என்றே வெளியிடப்பட்டுள்ளன. அவருடைய முகம் போன்ற ஒன்றை உடலம் ஒன்றின் மீது போலியாக பிளாஸ்ரி சேர்ஜரி முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும்.. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர். இதனை இட்டு மக்கள் குழப்பமடையாமல் எதிரியின் தமிழின அழிப்புத் திட்டத்தை முறியடிக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய முன் வர வேண்டும். உலகத்தமிழினமும் இதற்காக ஈழத்தமிழர்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.


அதுமட்டுமன்றி நேற்று, நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்று (19 -05- 2009) தான் மீட்கப்பட்டதாம் என்று சிறீலங்கா சிங்கள இராணுவப் பேச்சாளர் நாணயக்கார கூறியுள்ளார். செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் நேற்று பிரபாகரன் இறந்ததாக தாம் (சிறீலங்கா) ஒரு அறிக்கையும் விடவில்லை என்று முழுப் பொய்யைக் கூறியுள்ளார். இந்த எதிரியின் குழப்பமும் கவனத்தில் கொள்ளத்தக்கது.


எதிரிகள் தேசிய தலைவரின் இழப்பு எத்தகைய பாதிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதை கணித்துவிட்டு ஒப்போ திட்டமிட்டு இந்தப் பரப்புரையை செய்கின்றனர். அதற்கு நாணயக்காரவின் இந்த குழப்பம் நல்ல சான்று.


தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. எமக்கு அது அல்ல இப்போ முக்கியம்.


தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை எமது தமிழீழ போராட்டத்தை ஓய்வின்றி எல்லா வகையிலும் மக்களாகிய நாம் முன்னெடுத்துச் செல்லவதே இன்றைய இக்கட்டான இந்நிலையில் ஸ்திரமான முடிவாக இருக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளும் திட்டமிடல்களுமே அவசியம். சிறீலங்கா சிங்கள அரசின், சர்வதேச அரசுகளின் மனித உரிமை மீறல்களை, அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை.. அப்பாவித் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுவதை.. வெளிக்கொணர்ந்து எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயத்தை உலகம் ஏற்கச் செய்யவும் வேண்டும். அதுவே எமது இன்றைய தலையாய கடமை. அதன் மூலமே எமது தேசத்தின் விடுதலையை… எமக்கான அரசியல் உரிமையை நாம் எமது சொந்த பூமியில் நிலை நிறுத்த முடியும்.


தமிழீழ விடுதலைப் போராளிகளினதும் மக்களினதும் இலட்சியத்தை சுமந்து கொண்டு எமது இனத்தின் தேச விடுதலையை பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளில் எல்லாம் உலகெங்கும் ஓய்வின்றி போராடிக் கொண்டிருப்பது மட்டுமே இன்றைய எமது சிந்தனையில் இருக்க வேண்டிய முக்கிய விடயம்.


நிச்சயம் தேவையான பொழுதில் தேசிய தலைவர் மக்கள் முன் வருவார். ஆனால் அதற்கான பொழுதை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்..!

தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா.

பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றைய இந்திய அரசின் பேராதரவுடன் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்கா நடத்துகின்றது.

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலே, மருத்தவ மற்றும் பொது நிர்வாக வட்டாரங்கள் சேர்த்த புள்ளி விபரங்களின் படி -
இந்த வருடத்தின் அந்த முதல் 101 நாட்களில் மட்டும் -

கொல்லப்பட்ட 4,795 தமிழர்களில் - 1,207 சிறுவர்களும் 51 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்த 9,869 தமிழர்களில் - 2,864 சிறுவர்களும் 149 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர். 1,437 தமிழர்கள் உடல்
உறுப்புக்களை இழந்துள்ளனர்; அவர்களில் 394 பேர் சிறுவர்கள்.

வன்னியில் இருந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களினதும், ஐ.நா. சபையினதும் செயலாட்கள் இந்திய காங்கிரஸ் அரசினது ஆலோசனைக்கு அமைவாக எப்போதோ அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

தனது படைகளின் கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளால் - தமிழரது உடலங்களை மிதித்து கொண்டு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிறிலங்கா, அங்கு கடைசியாக எஞ்சியிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பணியாட்களையும் வெளியேற்றிவிட்டது.

போர்ப் பிரதேசங்களில் சேவையாற்றுவதே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அடிப்படைப் பணி; ஆனால் - சிறிலங்காவின் உத்தரவுக்கும், இந்திய அரசின் செல்வாக்கிற்கும் அஞ்சி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

சாட்சி சொல்ல யாருமற்ற தமிழினத் துடைத்தழிப்பு (Genocide), எம் மண்ணில் அவல ஓலங்களுடன் அரங்கேறுகின்றது.
வாய் கிழிய மனித உரிமைகள் பற்றிப் பிரசங்கம் செய்யும் இந்த உலகமோ, எல்லாம் தெரிந்த போதும், கை கட்டிப் பார்த்து நிற்கின்றது.

இந்திய அரசுக்கு எதிராய் ஒரு சுண்டுவிரலைத் தானும் நீட்ட வக்கற்று இந்த உலகம், 'இராஜதந்திரம்' என்ற பெயரில் வெட்கம் கெட்டு நிற்கின்றது.

கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக - தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து 'புதினம்' செய்தியாளர் செய்மதி தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.


இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும் எனவும், இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டு, தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட 'புதினம்' செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே:


பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன.


கனரக மற்றும் சிறுரக துப்பாக்கி சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன.


தாக்குதல் நிகழும் இந்த பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர்.


காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின் மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன.


விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும் - சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களாலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.


கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.


கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரினது உடலங்களும் நாலா புறமும் சிதறிக்கிடக்கின்றன.


திரும்பிய பக்கம் எல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது


கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாத காரணத்தினால் அந்த பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது.
இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறிலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர்.


படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதி எங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர்.


படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள் மக்கள் - அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக்கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர்.


அதேபோல - காயமடைந்து, சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள் தமக்கு 'சையனைட்' வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர்.


பதுங்கு குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடலங்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காய் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது.


இவ்வாறு கூறிய எமது செய்தியாளர், கடைசியாக - "இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண்முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டுவிடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சொல்லிவிட்ட பின்பு - யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும் போது - மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது?" என்று தழுதழுத்த குரலில் கேள்வி எழுப்பினார்.


2003 ஆம் ஆண்டில் இருந்து 'புதினம்' நிறுவனத்தின் வன்னிச் செய்தியாளராய்ப் பணிபுரிந்து - உண்மையான செய்திகள் மட்டுமே வெளிவர உழைத்து - 'புதினம்' நிறுவனத்தின் இரத்தமும், சதையுமாக இயங்கிய அந்த செய்தியாளர், கடைசியாக - "என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இதுதான் கடைசியாகவும் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்" என்று கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக காரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

"சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

'விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்' எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.

இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயறபடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.