தமிழன்இல்லாதநாடில்லை. தமிழனுக்கென்றுஓருநாடில்லை

ஈழத்தமிழர்களாகிய நாம் இனவெறி படைத்தவர்கள் அல்ல, போர்வெறி கொண்டவ ன்முறையாளர்களும் அல்ல. நாம் சிங்களமக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருதவில்லை. சிங்களப்பண்பாட்டைக்கெளரவிக்கின்றோம். சிங்களமக்களின் தேசியவாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்றுத்தாயகத்தில் ஒருதேசியமக்கள் இனம் என்ற அங்கீகாரத்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கெளரவத்துடன் வாழவிரும்புகிறோம். "தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம். இரண்டாயிரமாண்டுக்கு முன்பே, உலகத்துக்கு சகோதரத்துவத்தையும், உலக ஒற்றுமையையும் போதித்து 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனக்கூறியவர்கள் தமிழர்கள்.

அமைதியையும், அறிவையும், செல்வத்தையும் மட்டும் நாடி நின்ற ஈழத்தமிழர்கள், தமது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணியில் திகழ்ந்த ஈழத்தமிழர்கள், தனிநாடு வேண்டி ஆயுதமேந்திப்போராடுமளவுக்கு எவ்வாறு உந்த்ப்பட்டார்கள் என்பதற்கானவிடை தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்ப்பவர்களுக்கு நன்கு புரியும். தமிழர்களின் மொழிக்கும், தமிழ்மண்ணுக்கும் அவர்களது வாழ்வுநிலைக்கும் இழிவு ஏற்படாதகாலகட்டத்தில் 'யாதும்ஊரேயாவரும்கேளிர்" என்று உலகசகோதரத்துவத்தைப் பேணிய நமது முன்னோர்கள், தமது மொழிக்கு இழிவு ஏற்பட்டு, தமிழ்மண்பறிபோகும் நிலை ஏற்பட்டபோதெல்லாம் தமக்கிடையேயுள்ள பிரிவினைகளை மறந்துஒன்றுபட்டதமிழர்களாக, 'நாமார்க்கும்குடியல்லோம,; நமனைஅஞ்சோம்" எனப்பொங்கியெழத்தவறியதில்லை. தமிழை இழிவுபடுத்தியவட நாட்டவர்களானகனக -விசயன்களைவென்று, அவர்கள் சுமந்தகல்லில் தமிழ்த்தாய்க்குச் சிலையெடுக்கவும், தமிழ்மண்ணைக்காக்க அன்னியர்மேல் படையெடுக்கவும் தயங்கியதில்லை. ஆகவே, தாயிலும் இனிய தமிழ்மொழி 1956 இல் தனிச்சிங்களம் மட்டும் சட்டத்தால் இரண்டாம் நிலைக்குத்தள்ளப்பட்டபோது, ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகமான வடக்கு- கிழக்கு மாகாணங்கள், திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களால் பறிபோனபோது, தமது சொந்த மண்ணில், தமது மூதாதையர் ஆயிரமாயிரம் ஆண்டு கட்டிக்காத்த ஈழத்தமிழ்மண்ணில், ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுச் சிறுபான்மையினராக்கப்பட்ட போது பொங்கியெழுந்ததில் வியப்பேதுமில்லை!

எமது முன்னோர்கள் தமிழையும், தமிழ்மண்ணையும் காக்கத்தவறியதில்லை அதைத்தான் ஈழத்தமிழர்களும் இன்று செய்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்குத் தனிநாடு, அதாவது தமிழீழம் மலரவேண்டும், தமிழீழத்தில் மட்டும்தான்தமிழர்கள்பாதுகாப்புடன், நிம்மதியாக வாழ முடியும் என்ற தமிழீழக்கொள்கைதிடீரென பிரபாகரனின்கனவிலிருந்து உதித்ததோ அல்லது ஈழத்தமிழர்கள் குறுகிய இன, மொழி மனப்பான்மை கொண்டவர்கள் என்பதால் உருவானததுமல்ல. ஈழத்தமிழர்கள் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தமிழீழம் மலரப்போராட வேண்டும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்த்தலைவர்கள் அனைவரும் தமது வாழ்நாள் முழுவதையும் சனநாயகத்துக்கு அர்ப்பணித்த சனநாயகவாதிகளாவார். ஈழத்தமிழர்களால் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காந்தீய முறையில் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி 'ஈழத்துக்காந்தி" எனப்பெயரும் பெற்ற தந்தைசெல்வநாயகம், சிங்களத்தலைவர்களால் பலமுறை ஏமாற்றப்பட்டு, எத்தனையோ இனக்கலவரங்களில் தமிழர்களின் உயிர்களும், உடைமைகளும் பறிபோனதைக்கண்டு, இனிமேல் 'கடவுள் வந்தாலும் தமிழர்களைக் காக்க முடியாது" என நொந்து இலங்கைத்தீவில், எமதுமண்ணில், தமிழர்கள் பாதுகாப்பாக வாழ ஒரேவழி தமிழீழம்மலர்வதுதான் எனத்தீர்மானித்து "உயிரைக் கொடுத்தும் தமிழீழம் அமைப்போம்" என ஈழத்தமிழர்களை அழைத்தார்.



தொடரும்......
edit post

Comments

2 Response to 'தமிழீழம் மலரும் ஓர் நீண்டஆய்வு ! பகுதி-1'

  1. செல்வன் (அன்பு )
    http://vsramesh.blogspot.com/2009/07/1.html?showComment=1247226631527#c1717097611910356142'> July 10, 2009 at 4:50 AM

    நல்ல பதிவுகள் நண்பரே உங்கள் பணி தொடர வேண்டும்...நீங்கள் எங்கள் தளத்தில் இணைய வேண்டும் உங்கள் E-மெயில் தரவும்

    E-மெயில் முகவரி :Tamilossai@live.co.uk

    தள முகவரி : www.Tamilseithekal.blogspot.com

     

  2. செல்வன் (அன்பு )
    http://vsramesh.blogspot.com/2009/07/1.html?showComment=1247226728559#c5250740508604059948'> July 10, 2009 at 4:52 AM

    நல்ல பதிவுகள் நண்பரே உங்கள் பணி தொடர வேண்டும்...நீங்கள் எங்கள் தளத்தில் இணைய வேண்டும் உங்கள் E-மெயில் தரவும்

    E-மெயில் முகவரி :Tamilossai@live.co.uk

    தள முகவரி : www.Tamilseithekal.blogspot.com

     

Post a Comment